Sunday, December 5, 2010

கை கொடு.......

சன் டிவி,ராஜ் டிவி,விஜய் டிவி
ஜெயா டிவி,கலைஞர் டிவி,
மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,
சூப்பர் சிங்கர்,மன்மதன் அம்பு
பார்த்துக் கொண்டிருந்த போது
இலங்கையில் தமிழச்சிகள்
வன்புணர்ச்சிக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர்,
ராவணன் ஆண்டாலும்
ராஜபக்சே ஆண்டாலும்
நமெக்கென்ன கவலை என்று
தொடர் நாடகங்களில்
முளுகியிருந்தோம்.
தொலைக்காட்சி நாடகங்களில் 
ஒருத்திக்கு துன்பமென்றால்
துடிக்குது நம் மனது.
கண்ணெதிரே பல ஆயிரம்
பேர்,கண்டு கொள்ளவில்லை
 நம் மனது.
 கமல்,ரஜினி,
விஜய்,விக்ரம்,
அஜித்,சூர்யா,
த்ரிஷா,தமன்னா
அனுஷ்கா,ஷ்ரேயா
தவிர யார் செத்தால்
நமெக்கென்ன.
தன்னினம் அழிவதை
தானே வேடிக்கை பார்த்த
ஓரினம் நாமன்றோ தமிழா.
நாம் அனைவரும்
புத்திசாலிகள்தான் தனித்தனியே,
மொத்தமாக முட்டாள்கள்.
அதை கண்கூடாக பார்க்கிறோம்
தமிழகத்தில்.
புத்த மதம் தழுவியவர்கள் 
இன்று புலியாய் பாய்கிறார்கள்.
வீரன் சொறிந்த மறத் தமிழன்
இன்று மானம் கெட்டதேனோ?
முறத்தால் புலியை விரட்டினாள்
வீரத் தமிழச்சி அன்று.
வெறும் எலியைக் கூட
விரட்ட முடியாதவளாக்கி
விட்டனர் இலங்கையில் இன்று.

த்ரிஷாவும்,அனுஷ்காவும்
வரும் போது இமை மூடாமல் பார்க்கிறோம்,
இலங்கைத் தமிழர் இறப்பதை பார்த்தால்
சேனலை மாற்றுகிறோம்.
நாமல்லவா உண்மைத் தமிழர்.
நம் சகோதர,சகோதரிகள் இறந்து
கொண்டிருக்கையில்,நாம்
இந்த வருட சிறந்த
நடிக,நடிகையர் யாரென்று
விசனப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழா........
நண்பா............
மைனா,
வ குவாட்டர் கட்டிங்,
மன்மதன் அம்பு,
எந்திரன்
இவற்றைத் தவிரவும்
இவற்றை எல்லாம் தாண்டியதும்
நம் வாழ்க்கை என்று உணர்வாயா?
நம் தமிழச்சிகள்
கற்பழித்துக் கொல்லப் பட்டுக்
கொண்டிருக்கும் போது
நீ கதை பேசி காலத்தை
போக்கிக் கொண்டிருக்கிறாய்
என்பதை உணர்வாயோ.........
நாளை வரலாறு
நமேக்கேதிரே திரும்பும்
என்பதையும் உணர்வாயோ........
பத்து வீடு தள்ளிதான்
தீஎரிந்து கொண்டிருக்கிறது.
பத்து நிமிடம் கூட ஆகாது
நம் வீட்டில் பற்றி எரிய.
வெட்டிக்கதை,பழங்கதை
பேசுவதை விட்டு
நிகழ்கதை உணர்.
நாம் அனுபவித்ததில்லை
சொந்த ஊரில்,சொந்த இடத்தில
அகதிகளாக வாழ்வதை.
அனுபவித்துக் கொண்டிருக்கிறது
நம் இனம்.
இலங்கையிலே இனக்கலவரம்
இங்கோ பணக்கலவரம் .
நாம் உதவாமல்
நம்மினத்திற்கு வேறொருவர்
உதவார்.
உன் உயிரைக் கொடுக்க வேண்டாம்
உன் குரலை மட்டுமாவது கொடு
போதும்.
அனைவர் குரலும் சேர்ந்தால்
விண்ணை முட்டும்
மண்ணை புரட்டும்.
உதவு.............
நீ
உதவ மறுத்தால்
உனக்குதவி மறுக்கப்படும்.
அழிவது நம்மினம்
வீழ்வது நம்மினம்
இனியும் வேடிக்கை
என்றால்,
தமிழா,
உன் அளவிற்க் கேற்றாபோல்
இடமுண்டு இடுகாட்டில்..........

No comments:

Post a Comment